• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது

    திரு.ரத்தன் டாடாவின் தொலைநோக்கு அணுகுமுறை இந்திய ஆட்டோமொபைல் துறையை முன்னேற்றியது மட்டுமல்லாமல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உலகளாவிய பிராண்டுகளும் சந்தையில் இருப்பை நிலைநிறுத்த உதவியது.

    shreyash
    shreyash
    Published On அக்டோபர் 10, 2024 16:41 ist
    info icon
    published onOct 10, 2024 16:41 IST
    last updated onOct 10, 2024 16:41 IST
    116 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Ratan Tata With Tata Indica

    தொழிலதிபர், பிரபலம் மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்ற சர் ரத்தன் நேவல் டாடா தனது 86 -வது வயதில் காலமானார். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    டாடா குழுமங்களின் தலைவராக 1991-ம் ஆண்டு ரத்தன் டாடா பொறுப்பேற்றார். டாடா குழுமத்தை ஒரு பெரிய மற்றும் பலதரப்பட்ட நிறுவனமாக அவரது பங்களிப்பு மாற்றியது, சுகாதாரம், கல்வி மற்றும், மிக முக்கியமாக, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில். ரத்தன் டாடா டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடித்தளமிட்டார். மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் செய்தார். 

    “ டாடா குழுமத்துக்கு மட்டுமல்லாது நமது தேசத்துக்கும் அளப்பரிய பங்களிப்பை அளித்த அசாதாரணமான தலைவரான திரு.ரத்தன் நேவல் டாடாவிடம் இருந்து ஆழந்த வருத்ததோடு விடைபெறுகிறோம். டாடா குழுமத்திற்கு மட்டுமல்ல எனக்கும் அவர் வழிகாட்டியாகவும், நண்பராகவும் திகழ்ந்தார்.. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முன்முயற்சிகள் ஆழமான வேரூன்றிய அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவையனைத்தும் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பயனளிக்கும். ஒவ்வொரு தனிப்பட்ட தொடர்புகளிலும் திரு. டாடாவின் உண்மையான பணிவு இந்தப் பணிகள் அனைத்தையும் வலுப்படுத்தியது. முழு டாடா குடும்பத்தின் சார்பாக, அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவித்த கொள்கைகளை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடும்போது அவரது ஆன்மா தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்." என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    மிகப் பெரிய தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் வணிக உலகின் அடையாளங்களில் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்தன் டாடா எப்படி வாகனத் துறையில் முன்னணி நபராக ஆனார் என்பதையும், அவர் வழியில் அவர் செய்த முக்கிய பங்களிப்புகளையும் பார்ப்போம்.

    ரத்தன் டாடா -வின் பாதை ஒருபோதும் எளிதானது அல்ல

    ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார், அவருடைய லட்சியங்கள் ஒரு ஆட்டோமொபைல் வணிகத்தை உருவாக்குவதற்கு அப்பால் நீட்டிக்கப்பட்டன. அவர் பல துறைகள் மற்றும் நோக்கங்களுக்காக சேவை செய்யும் ஒரு தொழிலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இருப்பினும் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக மாறுவதற்கான அவரது பாதை எளிமையாக இல்லை. அவர் பாரம்பரியமான டாடா குடும்பத்தில் இருந்து வந்தவர். அது ஏற்கனவே ஒரு மாபெரும் நிறுவனமான பரிணமித்திருந்தது, ரத்தன் டாடா TELCO (டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனி லிமிடெட்) நிறுவனத்தில் அவரது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்நிறுவனம் இப்போது டாடா மோட்டார்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

    TELCO -ல் 6 மாதங்கள் செலவழித்த பிறகு, ரத்தன் டாடா 1963 இல் TISCO (டாடா இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனம்) இல் சேர்ந்தார். இது இப்போது டாடா ஸ்டீல் என்று அழைக்கப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸில் பள்ளிக்குச் செல்லும் ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டிஸ்கோ நிறுவனத்தில் தரைத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். ஒரு நபராக ரத்தன் டாடாவின் பணிவு மற்றும் பெருந்தன்மைக்கு இது ஓர் மிகப்பெரும் எடுத்துக்காட்டு.

    1991 -ல், ரத்தன் டாடா டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும் 1993 இல் அவரது மாமா, ஜே.ஆர்.டி.டாடாவின் மறைவுக்குப் பிறகு அவர் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும் ரத்தன் டாடா அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு டாடா மோட்டார்ஸை வணிக வாகனத்தில் முன்னணியில் இருந்து இன்று இருக்கும் நிலைக்கு மாற்றினார். இன்றைக்கு டாடா இந்தியாவில் EV கார் சந்தையில் முன்னணியில் இருக்கிறது.

    பேர்போன் டிரக்குகள் முதல் EVகள் வரை

    டாடா மோட்டார்ஸ் 1945 -ல் டெல்கோ நிறுவனமாக தொடங்கப்பட்டது. முதலில் இன்ஜின் தயாரிப்பில் கவனம் செலுத்திய அந்நிறுவனம் பின்னர் டெய்ம்லர்-பென்ஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இது டாடா-மெர்சிடிஸ்-பென்ஸ் கூட்டாண்மையின் கீழ் முதல் டிரக்கை வெளியிட வழிவகுத்தது. இந்த ஒத்துழைப்பு டாடா வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு உதவியது மட்டுமல்லாமல் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவியது. இதன் விளைவாக, மெர்சிடிஸ்-பென்ஸ் தனது சொந்த பிராண்டின் கீழ் 1995 -ல் இந்தியாவில் அதன் சொந்த W124 E-கிளாஸ் செடானை விற்பனைக்கு கொண்டு வந்தது. சுவாரஸ்யமாக முதல் மெர்சிடிஸ் புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டது.

    மெர்சிடிஸ்-பென்ஸ் க்கு முன், டாடா தனது முதல் பயணிகள் வாகனமான டாடா சியராவை 1991 ஆண்டு அறிமுகப்படுத்தியது. சியரா அதன் வடிவமைப்பு மற்றும் அது வழங்கிய அம்சங்களின் அடிப்படையில் புரட்சிகரமாக இருந்தது. 90 களில், பவர் விண்டோஸ் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்ற வசதிகளை உள்ளடக்கிய முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. பின்னர் 1992 ஆம் ஆண்டில் டாடா எஸ்டேட் வந்தது. இது இந்தியாவில் ஸ்டேஷன் வேகன் பாடிஸ்டைலை அறிமுகப்படுத்திய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காராக இருந்தது.

    சியரா மற்றும் எஸ்டேட்டை தொடர்ந்து டாடா திரும்பிப் பார்க்கவில்லை. அதன் பயணிகள் வாகன வணிகம் செழித்தது. 1994 -ல் சுமோ அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1998 -ல் சஃபாரி அறிமுகப்படுத்தப்பட்டது. சஃபாரி அது போன்ற எந்த எஸ்யூவி -யும் இல்லாத நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது; எளிமையான சொல்லப்போனால் இது இந்தியாவில் ஸ்டைலான எஸ்யூவி சந்தையை தொடங்கி வைத்தது மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒரு புதிய அளவிலான விருப்பத்தை உருவாக்கியது.

    இன்று டாடா தனது போர்ட்ஃபோலியோவில் 5 EV -களை கொண்டுள்ளது: டாடா டியாகோ EV, டாடா டிகோர் EV, டாடா பன்ச் EV, டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா கர்வ் EV.

    மேலும் பார்க்க: எனது புதிய ரெனால்ட் க்விட் காருக்கு BH நம்பர் பிளேட்டை (பாரத் சீரிஸ்) பெறும்போது நான் எதிர்கொண்ட சவால்கள்

    இண்டிகா & நானோ: வாகனத் தொழிலில் புரட்சி செய்த கார்கள்

    டாடா இண்டிகா

    Tata Indica V2 Turbo Side View (Left)  Image

    1990 களில், மாருதி 800 போன்ற கார்கள் ஏற்கனவே இந்திய கார் சந்தையில் பரவலாக இருந்தன. ஆனால் டீசல் இன்ஜினுடன் சிறிய கார்கள் இன்னும் கிடைக்கவில்லை. டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் உள்நாட்டு சிறிய காரை அறிமுகப்படுத்திய முதல் இந்திய வாகன உற்பத்தியாளர் டாடா ஆனது: டாடா இண்டிகா. 'மோர் கார் பெர் கார்' என்ற கோஷத்துடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது போது மாருதி ஜென் காரை போன்ற அளவுடன் அப்போது பிரபலமாக இருந்த அம்பாசடர் காரில் கிடைத்த அளவுக்கு இடத்தை வழங்கியது. அதன் பின்னர் டாடா இண்டிகா பல புதுப்பிப்புகளைப் பெற்றது. பின்னர் 2015 வரை சந்தையில் இருந்தது. பின்னர் இண்டிகா விஸ்டா பெயர்ப்பலகையாக மாறியது.

    டாடா நானோ

    Evolution: Tata Nano

    ஒரு நாள் மழைக் காலத்தில் ரத்தன் டாடா சாலையில் பயணித்த போது  கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பம் இரு சக்கர வாகனத்தில் செல்வதை பார்த்தார். அவர்கள் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர் மோட்டார் பைக்குகள் குடும்பங்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து முறை அல்ல என்பதை ரத்தன் டாடாவுக்கு அந்த சம்பவம் உணர்த்தியது. இந்திய குடும்பங்களுக்கு சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற அவர் விரும்பினார். ஆனால் முக்கிய கேள்வி எப்படி இருந்தது? இது சிக்கலைத் தீர்க்க ரூ.1 லட்சம் விலையில் சிறிய காரை உருவாக்கும் எண்ணம் உருவாக வழிவகுத்தது. வாகன உற்பத்தியாளருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது. ஆனால் டாடா நிறுவனம் அம்முயற்சியில் வெற்றி பெற்றது, மேலும் இந்தியாவின் மலிவான நான்கு சக்கர வாகனமான டாடா நானோ 2008 ஆண்டு வெளியிடப்பட்டது.

    இருப்பினும் நானோ திட்டமிட்டபடி வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் ரத்தன் டாடாவே நானோவை மலிவான கார் என்று சந்தைப்படுத்தியது ஒரு பெரிய தவறு என்று ஒப்புக்கொண்டார். பின்னர், நானோவின் விலை ரூ. 2 லட்சத்தை தாண்டியது, மேலும் அதன் விற்பனை 2020 ஆண்டில்  நிறுத்தப்பட்டது. 

    பில் ஃபோர்டுடன் ரத்தன் டாடாவின் சந்திப்பு

    டாடா சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தனது ஆட்டோமொபைல் வணிகத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஃபோர்டு நிறுவனமும் ஒன்று. பல அறிக்கைகளின்படி, ரத்தன் டாடா மற்றும் அவரது குழுவினர் 1999 ஆண்டு தங்கள் ஆட்டோமொபைல் வணிகத்தை வழங்குவதற்காக ஃபோர்டு தலைவர் பில் ஃபோர்டை சந்தித்தனர். இருப்பினும், சந்திப்பு சரியாக நடக்கவில்லை; கார்களை தயாரிப்பதில் டாடாவின் நிபுணத்துவம் குறித்து ஃபோர்டு பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். தெரியவில்லை என்றால் எதற்காக டாடா ஆட்டோமொபைல் தொழிலில் இறங்கியது எப்படி என்றும் என்று கேட்டனர்.

    ஜாகுவார் லேண்ட் ரோவரை கையகப்படுத்துதல்

    ஃபோர்டு உடனான டாடாவின் சந்திப்பு சரியாகப் போகவில்லை என்றாலும் 2008 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார் லேண்ட் ரோவரை டாடா வாங்கியபோது காட்சிகள் மாறின. ரத்தன் டாடா இந்த கையகப்படுத்தல் ஒரு பழிவாங்கும் செயல் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. 

    “டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நம் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான தருணம். ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகியவை உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட இரண்டு முக்கிய பிரிட்டிஷ் பிராண்டுகள். ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுவின் போட்டித் திறனை உணர்ந்து கொள்வதற்கு எங்களது முழு ஆதரவை வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஜாகுவார் லேண்ட் ரோவர் தங்களின் தனித்துவமான அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு, முந்தையதைப் போலவே அந்தந்த வணிகத் திட்டங்களைத் தொடரும். இரண்டு பிராண்டுகளின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் மற்றும் வரும் ஆண்டுகளில் இந்த போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். இரண்டு பிராண்டுகளின் வெற்றி மற்றும் முக்கியத்துவத்தை உருவாக்குவதில் ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுவை ஆதரிப்பதில் நெருக்கமாக பணியாற்றுவது எங்கள் நோக்கமாகும்." என அப்போது ரத்தன் டாடா தெரிவித்திருந்தார்.

    JLR -ல் இருந்து ஃபோர்டு லாபத்தை ஈட்ட முடியவில்லை என்றாலும் டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவரை உயிர்பெறச் செய்தது மட்டுமல்லாமல் அதை லாபகரமான பிராண்டாகவும் மாற்றியது.

    கார்தேக்கோவின் சார்பில் ரத்தன் டாடாவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்

    ரத்தன் டாடாவும் அவரது தொலைநோக்கு நுட்பங்களும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு உதவியது மட்டுமின்றி, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற பல்வேறு பிராண்டுகளுக்கும் இந்திய சந்தையில் தங்கள் கால்தடங்களை நிலைநிறுத்த உதவின. அவரது பங்களிப்புகள் என்றும் மறக்கப்படாது மேலும் அவரது மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.

    கார்தேகோவில் உள்ள நாங்கள் அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு வருத்தமடைகிறோம். மேலும் இந்த கடினமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது அன்பானவர்களுக்கும் எங்கள் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    shreyash
    A car enthusiast who enjoys driving and talking about cars 24/7, and not just because he has a background in automobile engineering and is fascinated by the mechanisms that turn wheels. He adores European automobiles, his personal favourite being the C8-gen Audi RS7, closely followed by the Skoda Superb. Besides cars, he also enjoys exploring new places.மேலும் படிக்க

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience