• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    இந்திய-கார்களை கிராஷ் டெஸ்டிங் செய்யும் அதிகாரத்தை பாரத் NCAP அமைப்பிடம் 2024 -ம் ஆண்டு குளோபல் NCAP ஒப்படைக்கும்

    குளோபல் NCAP, பாரத் NCAP அதிகாரிகளுக்கு ஆதரவையும் தொழில்நுட்ப ஆலோசனையையும் தொடர்ந்து வழங்கும்.

    rohit
    rohit
    Published On ஆகஸ்ட் 25, 2023 13:49 ist
    info icon
    published onAug 25, 2023 13:31 IST
    last updated onAug 25, 2023 13:49 IST
    139 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Global NCAP crash test

    • பாரத் NCAP 2023 அக்டோபர் 1 -ம் தேதி முதல் கார்களை சோதனை செய்யத் தொடங்கும்.

    • குளோபல் NCAP, 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, 2014 இல் #SaferCarsForIndia பிரச்சாரத்தை தொடங்கியது.

    • இது இதுவரை 50 -க்கும் மேற்பட்ட மாடல்களை கிராஷ் டெஸ்ட் செய்து, 0 மற்றும் முழு 5 நட்சத்திரங்களுக்கு இடையேயான மதிப்பெண்களை வழங்கியுள்ளது.

    • மஹிந்திரா XUV700, டாடா பன்ச் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவை பாராட்டத்தக்க செயல்திறன் கொண்டவை.

    அன்மையில் நமது நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்வுகள் நடத்தன, ஒவ்வொரு இந்தியனும், அதைப் பற்றி பெருமிதம் கொள்வோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்: ஒன்று சந்திரயான் -3 நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கியது (உலக சாதனை) மற்றும் பாரத் NCAP (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இரு துறைகளிலும் வெற்றி சாத்தியமாகியுள்ளது.

              View this post on Instagram                      

    A post shared by CarDekho India (@cardekhoindia)

    தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, பாரத் NCAP , உலகளாவிய NCAP பின்பற்றும் ஒத்த தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டது. எனவே, 2024 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான குறிப்பிட்ட மாடல்களை கிராஷ் டெஸ்டிங் செய்வதை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் புதிய இந்திய வாகன பாதுகாப்பு திட்டத்தில் உலகளாவிய அமைப்பு தனது நம்பிக்கையை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. BNCAP ஆனது குறிப்பாக நம் நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு மாடலுக்கும் பாதுகாப்பு மதிப்பீடுகளை வழங்கும். இது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பக்கூடிய பாதுகாப்பான காரை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

    குளோபல் NCAP இப்படி முடிவெடுக்க என்ன காரணம் ?

    குளோபல் NCAP -ன் நிர்வாகத் தலைவர் டேவிட் வார்டு, ET ஆட்டோவுக்கு அளித்த பேட்டியில், “இன்னும் 10 மாடல்கள் பைப்லைனில் உள்ளன, ஆனால் அது அப்படியே இருக்கும். பாரத் NCAPக்கு போட்டித் திட்டமாக நாங்கள் இதை பார்க்க விரும்பவில்லை. இது நுகர்வோருக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தலாம், அப்படி இருப்பது யாருக்கும் உதவாது.

    மேலும் படிக்க: பாரத் NCAP: பாதுகாப்பான கார்களுக்கான புதிய முயற்சி பற்றிய கார் தயாரிப்பாளர்களின் கருத்துகள்

    கூடுதல் நடவடிக்கை

    Bharat NCAP vs Global NCAP

    சர்வதேச அமைப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் (MoRTH) அமைச்சகத்தின் தொழில்நுட்ப செயலகமான, மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்துடன் (CIRT) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதால், உலகளாவிய பாதுகாப்பு ஆணையத்துடனான எங்கள் ஒத்துழைப்பு முற்றிலும் நிறுத்தப்படாது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குளோபல் NCAP, பாரத் NCAP அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஆதரவு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையை வழங்கும்.

    மேலும் படிக்க: பாரத் NCAP vs குளோபல் NCAP: ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள்

    இந்தியாவில் குளோபல் NCAP -ன் தாக்கம்

    Global NCAP crash test

    குளோபல் NCAP 2011 -ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தாலும், அது 2014 ஆண்டில்தான் #SaferCarsForIndia பிரச்சாரத்தை தொடங்கியது, இது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை நிவர்த்தி செய்ய இந்தியாவில் விற்கப்படும் கார்களுக்கு பாதுகாப்பு மதிப்பீடுகளை கொடுக்க தொடங்கியது. குளோபல் NCAP இதுவரை 50 க்கும் மேற்பட்ட மாடல்களை கிராஷ் டெஸ்ட் செய்துள்ளது, மதிப்பெண்கள் 0 முதல் முழு 5-நட்சத்திர மதிப்பீடு வரை வழங்கப்படுகின்றன. முதல் தொகுதி முடிவுகள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தபோதிலும், இது வெகுஜன சந்தை கார் பிராண்டுகளை ஊக்குவிக்கவும், மிக உயர்ந்த பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காகவும் தூண்டியது.

    Tata Punch crash test

    குளோபல் NCAP சோதனைகளில் பாராட்டத்தக்க செயல்திறன் கொண்டவர்களில் மஹிந்திரா XUV700, டாடா பன்ச் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா-ஃபோக்ஸ்வாகன் விர்ட்டஸ்/ஸ்கோடா குஷாக்-ஃபோக்ஸ்வேகன் டைகுன் டூயோஸ் ஆகியவை அடங்கும், இவை அனைத்திற்கும் ஐந்து நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தொடர்புடையவை: பாரத் NCAP  சிறந்த பாதுகாப்பிற்காக கிராஷ் டெஸ்ட் அளவுருக்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்கனவே கொண்டுள்ளது

    பாரத் NCAP சுருக்கம்

    புதிய பாரத் NCAP மதிப்பீடுகள் 2023 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவை குளோபல் NCAP’s யின் நெறிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஃபிரன்டல் ஆஃப்செட், சைடு இம்பாக்ட்மற்றும் சைடு போல் இம்பாக்ட் போன்ற பாதுகாப்பு சோதனைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.

    ஆதாரம்

    was this article helpful ?

    rohit
    Rohit Shah is a Content Writer with the CarDekho Group and an automotive journalist with nearly seven years of experience covering the automotive industry. He holds a Bachelor\'s degree in Business Management (International Business) and a Post Graduate Diploma in Business Management. Over the course of his career, Rohit has authored more than 2,500 articles for CarDekho, covering topics ranging from new car launches to the latest developments in the Indian and global automotive industries. His interest in cars began in childhood when he started collecting scale models, and he unwinds by taking a car out for a spin. When he\'s not talking or writing about cars, you can find him watching new movies and series or learning new languages.மேலும் படிக்க

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience